TN Police Constable PET/PMT தேர்வு – கொரோனா சான்று கட்டாயம்!!
வேலூர் மாவட்டத்தில் TNUSRB இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தகுதித்தேர்வு 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களுக்கு கொரோனா சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா சான்று
வேலூர் மாவட்டம் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் வரும் ஏப்ரல் 21ஆம் தேதி இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பவர்களுக்கு அசல் சான்றிதழ், உடற்கூறு தகுதித்தேர்வு போன்றவை நடைபெறவுள்ளது. இது குறித்து வேலூர் மாவட்ட தேர்வுக்குழு தெரிவிக்கையில், தகுதித்தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த அழைப்பு கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள படி விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை, அசல் சான்றிதழ்கள், அவற்றின் நகல்களை கொண்டு வர வேண்டும். அதே போல தகுதித்தேர்வுக்கு வரும் நபர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும் ஒரு வாரத்துக்குள் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழையும் எடுத்து வர வேண்டும். இதுவே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான சான்றிதழை அழைப்பு கடிதத்துடன் இணைத்து தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? தலைமை செயலர் ஆலோசனை!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வேறு ஒரு நாளில் தனியாக தகுதித்தேர்வுகள் நடத்தப்படும். தேர்வுக்கு வருபவர்கள் ஒரே கலரில் உள்ள அரைக்கால் சட்டையுடன் டீ-சர்ட் அணிந்து, காவலர்கள் போன்று முடிதிருத்தம் செய்திருக்க வேண்டும். அதே போல் மகப்பேறு காலத்தில் இருக்கும் பெண் விண்ணப்பதாரர்கள், அரசு மருத்துவரிடம் இயலாமை குறித்து முறையான சான்றிதழ் பெற்று அதை தேர்வு மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என அறிவித்துள்ளது.