தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஏப்ரல் 17) முதல் தேர்வு விடுமுறை (Study Leave) வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தேர்வு விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தாக்கம் பரவி வருகிறது. கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. 10 மாதங்களாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் மாநில அரசின் துரித நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதன் பின்னர் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் திறந்து 2 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு தேர்வு நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? தலைமை செயலர் ஆலோசனை!
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. அவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் 5 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும் செய்முறை தேர்வுகள் நேற்று முதல் தொடங்கப்பட்டன. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கு தயாராகும் வகையில் தேர்வு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் செய்முறை தேர்வுகள் நடைபெறும் நாட்கள் மட்டும் மாணவர்களுக்கு பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு – உயர்கல்வி அமைச்சர் அறிவிப்பு!!
கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவர்களுடன் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆலோசனை நடத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்டுள்ளதை தொடர்ந்து, தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.