72-வது இந்திய குடியரசு தினவிழா- பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் ரத்து!!
இந்திய குடியரசு தினவிழா வருகிற ஜனவரி மாதம் 26-ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடத்தப்பட உள்ள நிலையில் விழா கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை எனவும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின கொண்டாட்டங்கள்:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் அன்று சென்னை மெரினா கடற்கரையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும், இந்த ஆண்டும் அதே போல் ஜனவரி மாதம் 26-ஆம் தேதி முதல் குடியரசு தின விழா நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, “ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினம் அன்று சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் கோடி ஏற்றி சிறப்பிப்பார்.
தமிழகத்தில் நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும் – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!!
பிறகு சுதந்திர போராட்ட தியாகிகளும், பொது மக்கள் மற்றும் மாணவர்களும் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்று அச்சத்தால் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வயது மூப்பு காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அவர்களது வீடுகளுக்கே சென்று பொன்னாடை போர்த்தி கவுரவிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் மாதிரி தேர்வுகள் – பள்ளிக்கல்வித்துறை திட்டம்!!
மேலும் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. இந்தாண்டு கூட்ட நெரிசலை தடுக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக அவர்களுக்கு தொலைக்காட்சிகள் மூலம் நேரலையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது”, இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்