நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அமைத்தல் – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!!
தமிழகத்தில் ஜேஇஇ, நீட் தேர்வுகளை தவிர மற்ற உயர்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. ஆனால் அவைகளுக்கான பயிற்சி மையங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட வேண்டும் என வழங்கப்பட்ட மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பயிற்சி மையம்:
தமிழகத்தில் மத்திய கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு படிக்க நடத்தப்படும் நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் ஏராளமாக உள்ளன. அவைகளில் ஜேஇஇ மற்றும் நீட் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மட்டும் அதிகமாக உள்ளன. இதர உயர்படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த வக்கீல் மனோஜ் இமானுவேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு தேர்வு- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
அவர் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளவை, “தமிழகத்தில் ஏராளமான ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் உள்ளன. ஆனால் பொறியியல், மருத்துவம் படிப்புகளை தவிர இதர உயர்படிப்புகளான, சட்டம், கல்வியியல், கணக்கு தணிக்கை, விவசாயம், கவின்கலை, மேலாண்மை என பல துறைகளுக்கான படிப்புகளுக்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
ஆனால் இந்த படிப்புகளுக்கு தமிழகத்தில் பயிற்சி மையங்கள் இல்லை. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேசிய நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகள் அல்லது அதற்கு தேவையான பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்” இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
முதல் & 2ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் – உயர்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!!
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் தமிழகத்தில் மனுவில் குறிப்பிட்டுள்ள படிப்புகளுக்கான பயிற்சி மையங்கள் அமைப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி இந்த வழக்கை பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்