10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு தேர்வு- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

0
10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு தேர்வு- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு தேர்வு- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு தேர்வு- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

தமிழகத்தில் பள்ளிகள் 10 மாதங்களாக திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் மாணவர்களின் கற்றல் நிலை பற்றி அறிய மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த மதிப்பீட்டினை எமிஸ் தளம் மூலமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ஆன்லைன் தேர்வு:

தமிழக்தில் 10 மாதங்களுக்கு பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 10 மாதங்களாக நடத்தப்பட்ட வகுப்புகளில் எந்த அளவுக்கு கற்றல் திறன் உள்ளது என்பதை அறியும் வகையில் ஆரம்ப கற்றல் மதிப்பீடு ‘எமிஸ்’ தளம் மூலம் நடத்தப்படவுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலருக்கு நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு – சி.இ.ஓ உத்தரவு!!

அதில் அவர் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் கடந்த 19-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்காமல் இருந்த காலத்திலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவர்களின் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், மேலும் மடிக்கணினிகளில் பாடங்களின் தொகுப்பினை பதிவேற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொண்டது.

ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் இதுவரை எந்த அளவிற்கு பாடங்களை கற்றுள்ளனர் என்பதை அறிந்து ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு தெளிவில்லாத பாடங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு செய்ய மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

IAS தேர்வுக்கான இலவச பயிற்சி – ஜனவரி 24இல் நுழைவுத்தேர்வு!!

இந்த மதிப்பீடு ‘எமிஸ்’ தளம் மூலம் நடத்தப்படும். பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களில் உள்ள கணினிகளை பயன்படுத்தி இந்த தேர்வுகள் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்வுகள் வெள்ளிக்கிழமை முதல் நடக்கவுள்ளது”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!