ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!
தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிநுட்ப மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை உயர்வு:
தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தின் கீழ் தொல்நுட்ப மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு நிர்ணயித்த இலக்கை விட அதிக பேருந்துகளை இயக்கினால் ஊக்கத்தொகை வழங்கப்படும். பொதுவாக தொற்று பரவலுக்கு முன்னர் ரூ.50 வரை ஊக்கத்தொகை பெற்றுள்ளனர். ஆனால் கொரோனா காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்ததால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனவே அவர்களுக்கு ரூ.6 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.
மிகவும் கடினமான பணியாக ‘ஆசிரியர்’ பணி உள்ளது – யுசிஎல் ஆய்வில் தகவல்!!
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 90% பேருந்துகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை சரியாக கிடைக்கவில்லை. எனவே தொழில்நுட்ப மற்றும் அலுவலக ஊழியர்கள் ஊக்கத்தொகை அதிகப்படுத்தி வழங்க போக்குவரத்து கழகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
பிப்ரவரி 18ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
இது குறித்து பரிசீலனை செய்த போக்குவரத்து கழகம் முதற்கட்டமாக கும்பகோணம் கோட்டத்தில் உள்ள தொழில்நுட்ப மற்றும் அலுவலர்களுக்கு ரூ.23 ஊக்கத்தொகையாக வழங்க உள்ளது. அதேபோல சென்னை கோட்டத்தில் உள்ள தொழில்நுட்ப மற்றும் அலுவலர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.20 உயர்த்தி வழங்க போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்