பிப்ரவரி 18ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் வருகிற பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கல்லூரிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்த அரசு அறிவுறுத்தியது. அதன்படி கடந்த ஜூன் மாதம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டன. இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நேரடி வகுப்புகள் டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2021 – மாநில அரசு வெளியீடு!!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு மே 21-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. மேலும் பொறியியல் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் மே 24-ஆம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு !
மேலும் ஜூன் 2 ஆம் தேதி முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 14ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடக்கவிருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Deii online ode nu clear ah mention panniruku paarunga 😂😂