இந்தியாவில் பாமாயில் இறக்குமதி 29% அதிகரிப்பு – காரணம் இது தான்!
இந்தியாவில் கடந்த 11 மாதங்களில் பாமாயில் இறக்குமதி 29சதவீதம் அதிகரித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாமாயில் இறக்குமதி
சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகையான பாமாயில் இறக்குமதி குறித்து சால்வென்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி 2022-23 ஆம் ஆண்டில் கடந்த 11 மாதங்களில் நாட்டில் பாமாயில் இறக்குமதி வெகுவாக அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2022 நவம்பர் முதல் 2023 செப்டம்பர் வரை 11 மாதங்களில் 29.2% அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு என்ன காரணம் என்றால் உள்நாட்டில் போதுமான அளவு சமையல் எண்ணெய் இருந்தாலும் பாமாயில் விலை குறைவாக இருப்பதே இறக்குமதி அதிகரிப்பிற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது உள்நாட்டு சுத்திகரிப்பாளர்களுக்கு பெரிய அச்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல இந்தியாவில் கடந்த நவம்பர் செப்டம்பரில் வெஜிடபிள் ஆயில் இறக்குமதி 20% அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 130.13 லட்சம் டன்னாக இருந்தது, ஆனால் இந்த ஆண்டு செப்டம்பரில் மட்டும் வெஜிடபிள் ஆயில் இறக்குமதி 5% குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.