தமிழகத்தில் நவராத்திரியை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வு – மல்லிப்பூ கிலோ ரூ.800க்கு விற்பனை!!

0
தமிழகத்தில் நவராத்திரியை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வு - மல்லிப்பூ கிலோ ரூ.800க்கு விற்பனை!!
தமிழகத்தில் நவராத்திரியை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வு - மல்லிப்பூ கிலோ ரூ.800க்கு விற்பனை!!
தமிழகத்தில் நவராத்திரியை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வு – மல்லிப்பூ கிலோ ரூ.800க்கு விற்பனை!!

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பூக்களின் விலை:

நவராத்திரி பண்டிகை நாளை துவங்கி அடுத்த 9 நாட்கள் நடைபெற இருக்கும் நிலையில் பூ, வாழை இலை உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டி கொண்டிருக்கிறது. பொதுவாக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சந்தையில் இருந்து தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில், நவராத்தியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பூக்களை மொத்த விலையில் வாங்குவதற்காக குவிந்துள்ளனர்.

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையில் சிக்கல்.. அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

இந்நிலையில், பூக்களின் தேவை அதிகமாக இருக்கும் நிலையில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று வாடாமல்லி கிலோவுக்கு ரூ.40க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.100க்கும், கேந்தி பூ ரூ.35 க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.60 க்கும், செவ்வந்தி ரூ.60 லிருந்து ரூ.130க்கும், துளசி ரூ.20லிருந்து ரூ.50க்கும், பன்னீர் ரோஜா ரூ.50லிருந்து ரூ.100க்கும், அரளி ரூ.60லிருந்து ரூ.120க்கும், சம்பங்கி ரூ.60லிருந்து ரூ.130க்கும், பிச்சிப்பூ ரூ.300லிருந்து ரூ.750கும், மல்லிகை பூ ரூ.300லிருந்து ரூ. 800க்கும், தாமரை ஒன்று ரூ. 2லிருந்து அதிகரித்து ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திடீரென பல மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளதால் வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!