தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையில் சிக்கல்.. அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அக்டோபர் மாத தவணை எப்போது வரும் என மக்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், அதில் பல சிக்கல் எழுந்துள்ளது.
உரிமைத்தொகை திட்டம்
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான பணம் இன்னும் ஏறாமல் இருக்கிறது. அதாவது அக்.15 ஆம் தேதி பணம் வரவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அக்.15 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் அக். 14 ஆம் தேதி வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விண்ணப்பித்தவர்களுக்கு பணம் வராமல் இருந்தால் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் அதற்கான பணிகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. அதனால் இந்த மாதமும் கடந்த மாதத்தை போல 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 பேருக்கு மட்டுமே உரிமைத்தொகை கிடைக்கும். இந்த மாதம் உரிமைத்தொகை கிடைத்தால் 1065 கோடியே 21 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும். தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருக்கின்ற போதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
IND vs PAK 2023 WC Updates: இந்தியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு!
அதனால் இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு கடனில் உள்ள சூழலில் இதுபோன்ற திட்டங்கள் மேலும் கடன் சுமையை அதிகரிக்க வழிவகுக்கும் என்று மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பெண்களின் சுயமரியாதை, முன்னேற்றம் ஆகியவற்றுக்காக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தால் புதிய ரேஷன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்படுவதாக புகார்கள் அதிகமாக வருகிறது. எனவே அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.