தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
கனமழை:
தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தேனி, திண்டுக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வந்தாலும் வழக்கத்தை காட்டிலும் வெயிலின் தாக்கம் இருந்து வருவதாக பொதுமக்கள் அசௌகரியம் தெரிவித்துள்ளனர்.
சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக, மூட்டத்துடன் காணப்படலாம் எனவும், நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பொழியலாம் எனவும், அதிகபட்ச வெப்பநிலையாக 34முதல் 35 வரை நிலவலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று கடலோர பகுதிகளில் புயல் எச்சரிக்கை எதுவும் இல்லாத காரணத்தினால் வழக்கம் போல மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லலாம் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.