அக்டோபர் மாதத்தில் மட்டுமே இன்னும் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு விவரம் இதோ!
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இனிவரும் 15 நாட்களில் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வரவுள்ளது.
வங்கி விடுமுறை:
வங்கிகளுக்கு பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த பண்டிகை தின விடுமுறை மட்டும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. அதாவது, எந்தெந்த மாநிலத்தில் பண்டிகையோ அந்த மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த அக்டோபர் மாதத்தில் மட்டுமே மொத்தமாக 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதி விடுமுறை நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள விடுமுறை நாட்களை இப்பதிவில் காண்போம்.
இந்தியாவில் பாமாயில் இறக்குமதி 29% அதிகரிப்பு – காரணம் இது தான்!
- 15 அக்டோபர் – ஞாயிறு விடுமுறை
- 18 அக்டோபர் – கதி பிஹு காரணமாக அஸ்ஸாமில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
- 19 அக்டோபர்- சம்வத்சரி திருவிழா காரணமாக குஜராத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
- 21 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
- 22 அக்டோபர் – ஞாயிறு விடுமுறை
- 23 அக்டோபர் – மகா நவமி, ஆயுத பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
- 24 அக்டோபர் – தசரா, விஜயதசமி, துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
Follow our Twitter Page for More Latest News Updates
- 25 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
- 26 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
- 27 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
- 28 அக்டோபர் – நான்காவது சனிக்கிழமை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
- 31 அக்டோபர் – சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் காரணமாக குஜராத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
இந்த மாதம் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எனவே, வங்கிகளுக்கு செல்ல திட்டமிடுவோர் இந்த வங்கி விடுமுறை நாளை அறிந்து வங்கி பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.