OTP மூலம் அதிகரிக்கும் பண மோசடி – பாதுகாப்பாக இருப்பது எப்படி? எச்சரிக்கை பதிவு!
இந்தியாவில் மக்கள் பலர் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை அதிகம் செய்கின்றனர். அவ்வாறு செய்வதால் பல்வேறு மோசடிகள் நடைபெறுகிறது. அதில் இருந்து எப்படி? பாதுகாப்பது என்பது பற்றி பார்க்கலாம்.
பண மோசடி
நாடு முழுவதும் மக்கள் ஆண்ட்ராய்டு போன்கள் வாயிலாக டிஜிட்டல் பேங்கிங் முறையை பயன்படுத்தி வருகின்றனர். இதில் தற்போது OTP பைபாஸ் மோசடிகள் அதிகரித்து வருவதாக புகார் வந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக OTP மூலம் அதிகமாக மோசடி நடைபெறுகிறது. எனவே இந்த மோசடியை எப்படி தடுப்பது என பார்க்கலாம். முதலில் உங்களுக்கு வரும் SMS மற்றும் மின்னஞ்சலில் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக அதில் அனுப்பப்படும் லிங்க்கை கிளிக் செய்வதோ அல்லது தெரியாத ஆப்களில் இருந்து இணைப்புகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதே போல தனிப்பட்ட தகவல் அல்லது OTP-களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது.
இந்தியாவில் பாமாயில் இறக்குமதி 29% அதிகரிப்பு – காரணம் இது தான்!
மேலும் உங்களுக்கு சந்தேகத்திற்குரிய கால் அல்லது SMS வந்தால் உடனே உங்கள் வங்கி மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்கத்திற்கு உடனே புகார் அளிக்க வேண்டும். மேலும் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களில் மட்டுமேசெயலிகளை பதிவிறக்க வேண்டும். அதே போல பாதுகாப்பான வைஃபை நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவது நல்லது. பொது வைஃபை நெட்வொர்க்குகளில் நிதி பரிவர்த்தனைகளை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்.