இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் – மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
ஆசிய கோப்பை 2023 தொடரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை இந்தியா விளையாடாது என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு
2023 ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுவதாகத்தான் இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்தியா பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். அதனால் இந்த போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா விளையாடாது என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் எந்த இருதரப்பு போட்டிகளிலும் விளையாட மாட்டோம் என்று பிசிசிஐ நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தது. இருந்தாலும் எல்லையில் தாக்குதல் நடத்துவதையோ அல்லது ஊடுருவல் சம்பவங்களையோ நிறுத்தினால் தான் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவை மீண்டும் தொடங்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.