இந்தியாவில் ஒரே நாளில் 7, 830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – விரைவில் ஊரடங்கு!
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 7,000 – ஐ தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 7, 830 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல்:
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை மத்திய சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 7,830 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
WhatsApp : பயனர்கள் தங்கள் பாதுகாப்பைக் கட்டுப்படுத்த புதுமையான அம்சங்கள் – நிறுவனம் தகவல்!
திடீரென பாதிப்பு எண்ணிக்கை 7,000 – ஐ கடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். இதிலிருந்தே இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில் மறுபடியும் வைரஸ் தொற்று தீவிரம் எடுத்து பரவி வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
தற்போது பாதிப்பு எண்ணிக்கையை தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களின் விகிதமும் அதிகரித்துள்ளது. அதாவது மருத்துவமனைகளில் 40,215 பேர் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் ஊரடங்கு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
Exams Daily Mobile App Download