நாடு முழுவதும் முழு ஊரடங்கு தேவையில்லை – பிரதமர் மோடி உரை!!

0
நாடு முழுவதும் முழு ஊரடங்கு தேவையில்லை - பிரதமர் மோடி உரை!!
நாடு முழுவதும் முழு ஊரடங்கு தேவையில்லை - பிரதமர் மோடி உரை!!
நாடு முழுவதும் முழு ஊரடங்கு தேவையில்லை – பிரதமர் மோடி உரை!!

கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தை குறைக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு தேவையில்லை என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று இரவு காணொளி மூலமாக ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

பிரதமர் மோடி உரை:

கொரோனா இரண்டாம் அலை தாக்கம் மிகவும் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மக்கள் கொரோனா கட்டுப்பாடு விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் 2.59 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

எனவே மத்திய அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் நேற்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அதில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. எனவே நாடு கொரோனாவிற்கு எதிரான போருக்கு தயாராகி வருகிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

உள்ளூர் ஊரடங்கு உத்தரவு எதிரொலி – பொருளாதார பாதிப்பு!!

மேலும் கொரோனாவிற்கு எதிரான போரில் செயல்பட்டு வரும் நமது டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் தேவைப்படும் ஒவ்வொரு நோயாளிக்கும் அதை கிடைக்க செய்ய மத்திய, மாநில அரசுகளும், தனியார் துறையும் தொடர்ந்து எல்லா நடவடிக்கையும் எடுத்து வருகின்றன.

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.10,000 அபராதம் – மாநில அரசு அறிவிப்பு!!

நாட்டின் ஒவ்வொரு முலையிலும் தடுப்பூசி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மே 1 ஆம் தேதி முதல் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையாமல் கொரோனாவிற்கு போராடுவதே அரசின் நோக்கமாக உள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டாலும் அரசு தெரிவித்த நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிதியுதவி – அரசிடம் கோரிக்கை!!

இந்தியா 2 ‘மேட் இன் இந்தியா’ தடுப்பூசிகளுடன் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை தொடங்கி நடத்தி கொண்டிருக்கிறது. இளைஞர்கள் தங்களுக்குள் குழு அமைத்து, தங்கள் பகுதியில் கொரோனா நிர்வாகத்திற்கு உதவ வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் கட்டுப்பாடுகளோ, ஊரடங்கோ விதிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. ஊரடங்கிலிருந்து நாம் நம் நாட்டை காப்பாற்ற வேண்டும். ஊரடங்கை கடைசி ஆயுதமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!