உள்ளூர் ஊரடங்கு உத்தரவு எதிரொலி – பொருளாதார பாதிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக உள்ளூர் அளவிலான பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பகுப்பாய்வு நிறுவனமான க்ரைசில் தெரிவித்துள்ளது.
பொருளாதார பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. எனவே மாநில அரசுகள், மத்திய அரசுடன் இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளன.
TN Job “FB Group” Join Now
இதனால் உள்ளூர் அளவில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இந்தியாவை சேர்ந்த தரநிலை பகுப்பாய்வு நிறுவனமான க்ரைசில் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், “ஊரடங்கினால் பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பொருளாதார நடவடிக்கைகளை கண்காணிக்க உதவும் பிரதான காரணிகளான மின் நுகர்வு மற்றும் ஜிஎஸ்டி இ-வே பில்களில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!
கொரோனா தாக்கம் இந்த ஆண்டும் ஜூன் மாதம் வரை தொடரும் என தகவல் வெளிவந்துள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் நீடிக்கும் பொருட்டு இந்த நிலை மாறுமா என்பது போக போகத்தான் தெரியும்”, இவ்வாறு பகுப்பாய்வு நிறுவனமான க்ரைசில் தெரிவித்துள்ளது.