முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.10,000 அபராதம் – மாநில அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கைமீறி போனதால் இரவு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக 88,000க்கு அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த அரசு பல ஏற்பாடுகள் செய்துள்ளது. முதற்கட்டமாக இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
UGC NET 2021 தேர்வுகள் ஒத்திவைப்பு – மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு!!
மேலும் தற்போது உத்தரபிரதேசம் மாநிலத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அவ்வாறு விதியை மீறி முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு முதல் முறை அபராதமாக ரூ.1000 வசூலிக்கப்படும். மீண்டும் மறுமுறை முகக்கவசம் அணியாமல் வந்தால் ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என உத்தர பிரதேச அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.