தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிதியுதவி – அரசிடம் கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒரு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாததால் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால் அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆசிரியர்களுக்கு நிதியுதவி:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தாக்கம் வேகமாக போல பரவி வருகிறது. இதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதனால் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் தனியார் பள்ளிகளில் மாத சம்பளத்திற்கு பணியாற்றி வந்த ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த சம்பளத்தில் சிலர் மட்டுமே ஆன்லைன் மூலமாக வகுப்பு எடுத்துள்ளனர். பலர் வேலை இல்லாமல் உள்ளனர். பள்ளிகள் மீண்டும் வழக்கம் போல் செயல்படும் என அரசு உத்தரவிட்ட பின்னர் வேலைக்கு வாருங்கள் என தெரிவித்து விட்டனர்.
டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
எனவே அரசு தனியார் பள்ளிகளில் வேலை செய்து தற்போது, வேலையில்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் ஆசிரியர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை.