இந்தியாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா? – RBI கொடுத்த விளக்கம்!
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, பெரும் நிதி சுமையை ஏற்படுத்தும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
RBI அறிவிப்பு
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இது சாத்தியம் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து முக்கிய அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது அனைத்து மாநில அரசுகளும் தேசிய ஓய்வூதிய அமைப்பில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு திரும்பினால் நிதிச்சுமை 5 மடங்கு அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
பயிற்சி மையங்களில் பெண்களுக்கான சிறப்பு கட்டுப்பாடு – அரசின் புதிய அறிவிப்பு!!!
மேலும் 2060 ஆம் ஆண்டில் GDP-யில் 0.9% ஆக இருக்கும் என்றும் உள் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமில்லாமல் 2040களின் முற்பகுதியில் ஓய்வு பெறும் பழைய OPS ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியச் சுமையை அதிகரிக்கும், அதனால் 2060 வரை பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியம் இல்லை என மத்திய அரசு தன்னுடைய விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.