பயிற்சி மையங்களில் பெண்களுக்கான சிறப்பு கட்டுப்பாடு – அரசின் புதிய அறிவிப்பு!!!
பயிற்சி மையங்களுக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு:
உத்திரபிரதேச மாநிலத்தில் பயிற்சி மையம் சென்று படிக்கும் பெண்களுக்கான சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால், பெண்களின் படிப்பு பாதிக்கப்படும் என ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது அந்த கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் வளாகங்களில் பெண்களுக்கென தனியாக கழிப்பறைகள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC AE தேர்வில் ஈஸியா ஜெயிக்கலாம் – ரெடியா தேர்வர்களே!
மேலும், பயிற்சி மையங்களுக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை கல்வி நிறுவனங்கள் தான் உறுதி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களின் நுழைவாயில்கள் அனைத்திலும் மற்றும் வெளியேறும் பகுதிகள், பயிற்சி வகுப்புகள் என அனைத்து பக்கமும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக ஏகப்பட்ட அநீதிகள் நடைபெற்று வரும் நிலையில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.