சென்னையில் கோடைக் காலம் முடிவுக்கு வருகிறது.. வானிலை ஆய்வாளர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வழக்கமாக மே மாத இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருமவழை நடப்பாண்டு முன்கூட்டியே நிகழும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தெற்கு அந்தமான் கடல், மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 13 ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
ஊதியத்துடன் கூடிய அகவிலைப்படி இம்மாதம் வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவித்த முக்கிய தகவல்..!!
இதை தொடர்ந்து, கேரளாவில் வழியாக படிப்படியாக குமரிமுனை வரை பரவும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் “கடந்த 25 ஆண்டுகளில் 2004, 2018, 2022 ஆகிய 3 ஆண்டுகளில் சென்னையில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டாமல் இருந்த நிலையில் தற்போது கோடை காலம் முடிவுக்கு வருகிறது என்றும், தமிழகத்தில் இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் தெரிவித்துள்ளார்”.


























