ஊதியத்துடன் கூடிய அகவிலைப்படி இம்மாதம் வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவித்த முக்கிய தகவல்..!!
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டிற்கும் இரண்டு முறை மத்திய மற்றும் மாநில அரசுகள், தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்துவது குறித்து அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை கடந்த மார்ச் 28 ஆம் தேதி உயர்த்துவதாக அறிவித்ததை தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 28 ஆம் தேதி விதி அன்று எண் 110 இன் கீழ் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் இந்த அகவிலைப்படி பற்றிய முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 மாத அகவிலைப்படி உயர்வு, நிலுவைத் தொகை இம்மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவை 12 மாத CPI-IW தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு ஊழியர்களுக்கு வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது.


























