
மீண்டும் பரவ தொடங்கியது COVID-19.. ஆசிய நாடுகளில் அதிகரிக்கும் பாதிப்புகள்.. வெளியான முக்கிய தகவல்..!!
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகெங்கும் பரவிய கொரோனா மக்களின் வாழ்வாதாரத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், பல அலையாகத் தாக்கிய கொரோனா, ஒவ்வொரு சமயத்திலும் வலுப்பெற்று சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியது. இந்த பெரும் தொற்று நவீன மருத்துவ கட்டமைப்புகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும், கடந்த 2 ஆண்டுகளாக இந்த தொற்று பாதிப்பு பெரியளவில் கண்டறியப்படவில்லை என்றாலும், கொரோனா வைரஸ் தீவிரத்தை பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் ஆசியாவின் இரு முக்கிய நகரங்களான ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் தற்போது திடீரென கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சுகாதார அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், “சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி மே 3 ஆம் தேதியுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28% அதிகரித்து 14,200 ஆக உயர்ந்துள்ளதாகவும், தினசரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சுமார் 30% அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது”.
Join the ExamsDaily Whatsapp Group

























