விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரிப்பு..! மகிழ்ச்சியில் வியாபாரிகள்..!
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி என்பது இந்துக்களின் பண்டிகைகளில் மிக முக்கியமானதாகும். அதாவது விநாயகர் பிறந்த நாளை நாம் அனைவரும் விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கிறோம். அதனை தொடர்ந்து தற்போது விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், 1 கிலோ கனகாம்பரம் 2,500 ரூபாய்க்கும், மல்லிகை மற்றும் முல்லை 400 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 1 கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும்,விலையையும் பொருட்படுத்தாத மக்கள் அதிகமான பூக்களை வாங்கி செல்கின்றனர்.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா.. விவரம் உள்ளே!!



























