பான் கார்டுகளை நீக்க திட்டம்.. வருமான வரித்துறை அறிவித்த புதிய விதிமுறை..
வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போல் பான் கார்டையும் அடையாளச் சான்றாக அனைத்து நிதி நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளும் ஏற்றுக்கொள்கின்றன. மேலும், வரி விலக்குகள் பெறுவதில் பான் கார்டு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் பல தளங்களை ஒரே அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற முக்கிய குறிக்கோள் கொண்டு அரசு ரூ.1,435 கோடி ஒதுக்கீட்டில் பான் 2.0 திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மேலும், இந்த திட்டம் மேம்படுத்தப்பட்ட மின்-ஆளுமை மூலம் PAN மற்றும் TAN சேவைகளை நவீனமயமாக்க உள்ளது.
கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு வைத்த HDFC வங்கி… அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!!
எனவே இந்திய குடிமக்கள் எவரேனும் பான் கார்டுகளை பெறும்போது தவறான தகவல்களை வழங்குதல் அல்லது தேவைப்படும் போது உங்களுடைய பான் கார்டை வைத்திருக்காமல் இருப்பது போன்ற செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருமான வரிச் சட்டம் 272 பி பிரிவின் கீழ் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது. மேலும், ஒரு தனிநபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பதும் பெரும் குற்றமாகும். இந்த கூடுதல் பான் எண்ணை நீக்க அல்லது செயலிழக்கச் செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் இல்லை என்றால் சிறை தண்டனை கிடைக்கும் என இந்திய வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.



























@select purge bash exit ..%*+
Samal
One down-loaded Pancard and another issued by Pancard issuing agencies under Same Number could be taken as one and same or not? Kind clarification is much appreciated.