தமிழகத்தில் நிலநடுக்கம்…பீதியில் மக்கள்..!! ” முழு விவரம் உள்ளே”..!!
திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது தமிழகத்தில் உள்ள மிக முக்கிய மாவட்டம் ஒன்றில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டாரத்தில் உள்ள புத்தாநத்தம் பகுதியில் அதிக சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், சுமார் 5 வினாடிகள் வரை நில அதிர்வு ஏற்பட்டதால், வீடுகளில் உள்ள பாத்திரங்கள்,கதவுகள் உள்ளிட்ட பொருட்கள் குலுங்க ஆரம்பித்தன. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.


























