
இனி கடைகளில் தமிழ் பெயர் பலகைகளுக்கு மட்டுமே அனுமதி..!! .இல்லைனா நோட்டிஸ் அனுப்பப்படும் என அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் சுற்றுப்புற சூழலை மேம்படுத்தும் நோக்கில், குறிப்பாக பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மஞ்சப்பை விற்பனை தானியங்கி இயந்திரத்தை சென்னை மேயர் பிரியா இன்று துவக்கி வைத்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, “மஞ்சப்பை திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 25 இயந்திரங்களும், அடுத்ததாக 17 இயந்திரங்களும் சென்னையில் நிறுவ திட்டமிட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார்.
இனி பார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே கார்கள் வாங்க முடியும்…போக்குவரத்து ஆணையம் அதிரடி அறிவிப்பு
மேலும், “இந்த மார்ச் மாதத்தில் மட்டும் 12 நாட்களில் மொத்தம் 108 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார். இதையடுத்து, தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக, “சென்னை மாநகர கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை வைக்கவும்” உத்தரவிட்டுள்ளார். மேலும், இதற்கு 7 நாட்கள் மட்டுமே கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும், பெயர்ப்பலகை மாற்றாத கடைகளுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.























