TNPSC தேர்வாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ‘இதனை’ உடனடியாக செய்ய அறிவுறுத்தல்!
குரூப் 4, 7பி, 8 தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் ஏற்கனவே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பர். ஆனால், தற்போது மீண்டும் அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(TNPSC) மூலமாக குரூப் 2, குரூப் 4 முதலான தகுதி தேர்வுகளை நடத்தி திறமையான தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த வகையில் கடந்த மே 21 ஆம் தேதியில் குரூப் 2 தேர்வு நடைபெற்றது. மேலும், குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும், குரூப் 7பி மற்றும் குரூப் 8 பதவிகளுக்கான தேர்வையும் TNPSC தற்போது வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குரூப் 4 தேர்வு குறித்தான முக்கிய அறிவிப்பு ஒன்றை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது பதிவேற்றிய சான்றிதழ்கள் அனைத்தையும் மீண்டும் பதிவேற்றம் செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றுகளை பதிவேற்றியிருப்பர். அந்த சான்றிதழ்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் விண்ணப்பதாரர் TNPSC ன் அதிகாரபூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று நிரந்தரப் பதிவு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – அரசாங்கம் அறிவிப்பு!
பின்பு, விண்ணப்பதாரரின் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்து உள்ளே நுழைய வேண்டும். அதன் பின்னர் அதில் உள்ள குரூப் 4 PSTM என்பதை கிளிக் செய்து பழையபடி மீண்டும் அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்ற வேண்டும். ஆனால், டாஷ்போர்டில் PSTM Documents என்று இருந்தால் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல குரூப் 7பி மற்றும் குரூப் 8 தேர்விற்கும் நிரந்தரப் பதிவில் இருக்கும் Current Application ல் உள்ள View Documents என்கிற பகுதியை கிளிக் செய்து அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர் சான்றிதழ்களை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.