வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்போருக்கு முக்கிய தகவல் – ஆட்சியர் அறிவிப்பு!

0
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்போருக்கு முக்கிய தகவல் - ஆட்சியர் அறிவிப்பு!
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்போருக்கு முக்கிய தகவல் - ஆட்சியர் அறிவிப்பு!
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்போருக்கு முக்கிய தகவல் – ஆட்சியர் அறிவிப்பு!

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணியினை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்ட நிலையில், இதனை ஆன்லைன் மூலம் செயல்படுத்துபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை இணைக்கும் பணி:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணமாக வாக்காளர் அடையாள அட்டை விளங்குகிறது. இந்திய தேர்தல் ஆணையம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி வருகிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம். வாக்களிப்பது இந்தியாவில் உள்ள அனைவரின் முக்கிய கடமையாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாக்காளர் அடையாள அட்டை தான் அனைத்து வேலைகளுக்கும் முக்கிய ஆவணமாக விளங்கியது. தற்போது மத்திய அரசின் உத்தரவின் படி ஆதார் அனைத்து தேவைகளுக்கும் ஆதாரமாக விளங்குகிறது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதாருடன் தொலைபேசி எண் இணைக்கப்பட வேண்டும் என்று UIDAI அறிவித்திருந்தது. அவ்வாறு இணைத்தால் மட்டுமே அரசின் மூலம் பெறப்படும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாட்டில் நூறில் எண்பது சதவீதம் பேர் ஆதார் அட்டையுடன் தொலைபேசி எண்ணை இணைத்துவிட்டனர் . தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைத்தால் மட்டுமே அரசின் சலுகைகள் பெற முடியும் என்று UIDAI அறிவித்துள்ளது.

நீங்களும் ரயில்வே பணியில் அமர வேண்டுமா? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!

Exams Daily Mobile App Download

இதன் மூலம் நாட்டில் போலி வாக்காளர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதனை எவ்வாறு ஆன்லைன் மூலம் இணைப்பது என்பது குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஆதார் எண் – வாக்காளர் அட்டை இணைப்பை இணையம் மூலம் பதிவேற்றம் செய்யும் முதல் 1000 நபர்களுக்கு இ- சான்றிதழ் வழங்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வாய்ப்பினை நாமக்கல் மாவட்ட மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!