JEE தேர்வர்களும் B.Arch கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி – அண்ணா பல்கலைக்கு உத்தரவு!
இந்தியாவில் 2021 – 2022 ம் கல்வியாண்டில் நட்டா அல்லது ஜே.இ.இ நுழைவுத்தேர்வு எழுதியவர்களை பிஆர்க் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிஆர்க் :
நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ.இ. மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஜேஇஇ நுழைவுத் தேர்வு ஒரு ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும் இரண்டாம் கட்டமாக மார்ச் மாதத்திலும் தேர்வு நடைபெறும். அடுத்த கட்ட தேர்வுகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும்.
PF அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – மாதந்தோறும் கிடைக்கும் பென்ஷன்!
இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்றது.தொற்று குறைந்ததும் நேரடி தேர்வுகளை நடத்தலாம் என்று கல்வித்துறை எண்ணி கொண்டு இருந்த போது கொரோனா மென்மேலும் அதிகரித்ததால் அனைத்து பள்ளி கல்லூரி மற்றும் செமஸ்டர் தேர்வுகளும் தாமதமாகவே நடைபெற்றது. அதே போல ஜே.இ.இ நுழைவு தேர்வும் தாமதமாகவே நடைபெற்றது.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் காலிப்பணியிடங்கள் – முக்கிய கோரிக்கை!
இந்த நிலையில் ஜே.இ.இ நுழைவு தேர்வுகள் எழுதியவர்களை பிஆர்க் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை அடுத்து தற்போது இந்த ஆண்டு நடைபெறும் B.Arch கலந்தாய்வில் ஜே.இ.இ நுழைவு எழுதியவர்களும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.