தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் காலிப்பணியிடங்கள் – முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில், காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என எம்எல்ஏ ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேண்டுகோள்:
கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு பணிக்கான காலியிடங்கள் ஏதும் நிரப்பப்படவில்லை. மேலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அரசு வெளியிட்ட அறிவிப்பிற்கான தேர்வுகளை நடத்துவதற்கான சூழல் அமையவில்லை. பொது மக்கள் அதிகமாக கூடுவது மூலம் கொரோனா பரவும் விகிதம் அதிகரிக்கும் என்பதால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் தடுப்பூசி பணிகள் தீவிரமாக்கப்பட்டது.
தமிழக அரசு அலுவலர்களின் வேலைநிறுத்த போராட்ட காலங்கள் பணிக்காலமாக அறிவிப்பு!
இதனால் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. அதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நாமக்கல் பணிமனை முன், கொமதேக வின், தீரன் தொழிற் சங்க துவக்க விழா நடைபெற்றது. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, பெயர் பலகையை திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
TNPSC குரூப் 1, 2 தேர்வர்கள் கவனத்திற்கு – போட்டித்தேர்வு மாதிரி வினா விடைகள்!!
அரசு போக்குவரத்து கழக செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கவனித்து வருகிறார். போக்குவரத்து கழகத்துக்கு தேவையான உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்வதில், முதல்வர் நேரடியாக தலையிடுவதால் செலவுகளை குறைக்க முடியும். போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார். விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் நகருக்கு ரிங் ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி, குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள், கடந்த ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அவற்றை நிறைவேற்ற, தற்போதைய எம்.எல்.ஏ., ராமலிங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறார் என செய்தியாளர்களிடம் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.