தமிழக அரசு அலுவலர்களின் வேலைநிறுத்த போராட்ட காலங்கள் பணிக்காலமாக அறிவிப்பு!
நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் அரசு அலுவல்கள் வேலை நிறுத்த போராட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்டதை மாற்றி பணிக்காலமாக முறைப்படுத்தி அறிவித்துள்ளது. இதற்கான அரசின் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 2016, 2017, மற்றும் 2019ம் ஆண்டுகளில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொண்டது மற்றும் தற்காலிக பணி நீக்கம் போன்றவை பணிக்காலமாக முறைப்படுத்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிக்கையை மாவட்டத்தின் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுப்பி வைத்துள்ளார்.
தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
இது குறித்த அறிக்கையில், அரசாணையில் தெரிவித்துள்ளவாறு வேலை நிறுத்தப்போராட்ட காலம் மற்றும் தற்காலிக பணி நீக்க காலங்களை பணிக்காலமாக முறைப்படுத்தி அலுவலகத் தலைவர்கள் உரிய செயல்முறை ஆவணங்களை பிறப்பித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பணிகால ஊதியத்தினை பெற்று வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிப்பதிவேட்டில் எந்த ஆண்டு போராட்டம் அல்லது தற்காலிக பணி நீக்கம் என்று தலைப்பு எழுதி பதிவு செய்ய வேண்டும். பணிக்காலமாக முறைப்படுத்தப்படும் நாட்களுக்கு பணிக்காலம் சரிபார்த்த பதிவுகள் பதியப்பட வேண்டும்.
Android ஸ்மார்ட்போனில் ஆட்டோ-கரெக்ட்டை சரிசெய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
போராட்ட கால விடுப்பு நாட்களால், வருடாந்திர ஊதிய உயர்வு உரிய நாளில் வழங்கப்பட்டு, அதன் பணப்பலன் தள்ளி வழங்கப்பட்டு இருப்பின், அதன் விபரமும் உரிய செயல்முறை ஆணைகள் வழங்கப்பட்டு முறைப்படுத்திட வேண்டும். பணிக்காலமாக முறைப்படுத்திட பிறப்பிக்கப்படும் செயல்முறை ஆணையிலேயே ஆண்டு ஊதிய உயர்வு முறைப்படுத்தப்படும் விபரமும் இடம் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் இவற்றை முறைப்படுத்திட மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.