தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்? தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்!
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவிடம் தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தி இருக்கிறது.
தேசிய கல்விக் கொள்கை:
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இந்நிலையில் ஆனால் அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2022 -ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் கல்வி கற்பார்கள் என பிரதமர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் இந்த திட்டம் மூலம் NEP பாடத்திட்டத்தைக் குறைத்து அடிப்படைக் கற்றலில் கவனம் செலுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவை மதிப்பெண் சார்ந்த கல்வியிலிருந்து கற்றல் சார்ந்த கல்விக்கு அழைத்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் பயனர்களுக்கு புதிய வசதி – Character Limit 4000 ஆக அதிகரிப்பு.. எலான் மஸ்க் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
ஆனால் இதற்கு தமிழக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதனால் மாநில கல்விக் கொள்கை உருவாக்கும் குழுவிடம் தனியார் பள்ளிகள் சார்பில் முக்கிய கோரிக்கை ஒன்று முன் வைக்கப்பட்டுள்ளது. அதன் படி மேலும் தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு அமல்படுத்தாத பட்சத்தில், தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறிவிடும் எனவும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.