ஐ.ஐ.டிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு!

0
ஐ.டி.ஐகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

ஐ.ஐ.டிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களான ஐஐடி களில் சேர மாணவர்களுக்கும் வரும் ஜூன் 20ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு:

2023 ஆம் ஆண்டில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மே 24ம் தேதி முதல் பெறப்பட்டது. தற்போது இதற்கான காலக்கெடு ஜூன் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஐ.சா மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

வெளியானது வாக்காளர் பட்டியல் – இத்தனை பேர் நீக்கமா? ஷாக் ரிப்போர்ட்!

விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் இணையதளம் வாயிலாக அரசு ஐஐடி மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலர்களின் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே சேர விரும்பும் மாணவர்கள் தங்களின் அனைத்து அசல் சான்றுகளுடன் வந்து நேரடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50 செலுத்த வேண்டும். இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலனி, பாடப்புத்தகம் பேருந்து பயண அட்டை, வரைபட கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூபாய் 750 வழங்கப்பட உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!