வெளியானது வாக்காளர் பட்டியல் – இத்தனை பேர் நீக்கமா? ஷாக் ரிப்போர்ட்!
தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு புதிதாக பலர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர். அதில் 4.86 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல்
மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில் இந்த முறை தேர்தலில் வாக்களிக்க பலர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர். அந்த வகையில் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜன.22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் பின் கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி முதல் இந்த மாதம் 17 ஆம் தேதி வரை மொத்தம் 17.28 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
2வது நாளாக குறையும் தங்கம் விலை – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
அதில் பெயர் சேர்க்க விண்ணப்பித்த 6.12 லட்சம் விண்ணப்பங்களில் 5.33 லட்சம் ஏற்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் பட்டியலில் உள்ள பெயரை நீக்கக்கோரி 5.35 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 4.86 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளன. 26,405 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 22,806 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. அதே போல பெயர் திருத்தம் செய்ய 5.80 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 4.91 லட்சம் ஏற்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளன. 59,849 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 29,824 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.