ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் மாற்றம் – மத்திய அரசின் திட்டம்!
நாட்டில் தற்போது பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு வழங்கி வரும் குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை மாற்ற இந்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது.
அடிப்படை ஊதியம்:
இந்தியாவை பொறுத்த வரையில் 500 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 90 சதவீதம் வரையிலான நபர்கள் வகைப்படுத்தாத துறையை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மாநிலத்தைப் பொறுத்து ரூபாய் 176 ஒரு நாள் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தேசிய குறைந்தபட்ச ஊதிய தொகையானது மாற்றம் செய்யாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அரசாங்கம் 2025 ஆம் ஆண்டுக்குள் தற்போது செயல்பாட்டில் இருக்கும் அடிப்படை ஊதியத்தை வாழ்வதற்கான ஊதியமாக மாற்றும் திட்டத்தை ஆலோசனை செய்து வருகிறது.
ஐ.ஐ.டிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு!
குறிப்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இதற்காக செயல்பட திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தன் வளர்ச்சி இலக்குகளை அடைய மேற்கொண்டு வரும் முயற்சிகளில் அடிப்படை ஊதியத்திற்கு பதிலாக வாழ்வதற்க்கான ஊதியத்தை வழங்குவது மக்களை வறுமைக் கோட்டில் இருந்து வெளியேற்றுவதற்கும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உறுதி செய்வதற்கும் வழி வகுக்கும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.