தீவிரமாகும் காஸா போர் – கைகொடுக்கும் ஐ.நா கவுன்சில்! முழு விவரம்!
காஸா போர் நிறுத்தம் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் தற்போது அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
தீர்மானம்
காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள் உட்பட 32 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் காஸாவில் போர் நிறுத்தம் குறித்து உடனே ஒரு வரைவு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. அதற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் மாற்றம் – மத்திய அரசின் திட்டம்!
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக சீனா, ரஷியா உள்ளிட்ட 14 உறுப்பு நாடுகள் வாக்களித்து இருப்பதாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவோ எதிர்த்தோ வாக்களிக்காமல் புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 4 முறை கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த தீர்மானங்கள் தோல்வியடைந்த நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானம் முதன்முறையாக நிறைவேற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.