தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி தர மறுக்கும் ஒன்றிய அரசு – முதல்வரின் கருத்து என்ன தெரியுமா?
தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும் போது மத்திய அரசு நிவாரண நிதி வழங்காமல் இருந்தது. அது குறித்து முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெள்ள நிவாரணம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை மிக்ஜாம் புயல் தாக்கியது. அதனால் பலத்த சேதாரம் ஏற்பட்டது. அதன் பின் ஒரே வாரத்தில் தென் மாவட்டங்களாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் வரலாறு காணாத மழை பெய்தது. அதனால் பல குடியிருப்புகள் நீரில் மூழ்கியது. எனவே அரசு இவர்களுக்கு ரூ. 6000 நிவாரணம் வழங்குவதாக அறிவித்தது. இதற்காக மத்திய அரசிடம் தமிழக அரசு வெள்ள நிவாரண நிதி கேட்டு கோரிக்கை வைத்தது.
தீவிரமாகும் காஸா போர் – கைகொடுக்கும் ஐ.நா கவுன்சில்! முழு விவரம்!
இந்த கோரிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிசீலனை செய்தார். இது பெரிய பாதிப்பாக இல்லை எனவும், அதனால் நிவாரணம் வழங்க முடியாது என அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் நாங்குநேரியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இது குறித்து கண்டனம் தெரிவித்தார். அதாவது தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.