AIRTEL நிறுவனத்தின் தடாலடி கட்டண உயர்வு – இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன் அளிக்க கூடிய வகையில் திடீரென்று ப்ரீபெய்டு திட்டங்களுக்கான விலை உயர்வு முடிவை எடுத்துள்ளது.
கட்டண உயர்வு:
நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் கடந்த சில மாதங்களாக தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிக சலுகைகளை வழங்கி வந்தது. இந்நிலையில் அதிரடியாக ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டணத்தில் விலை உயர்வை அறிவித்துள்ளது. மேலும் பல திட்டங்களின் விலையையும் தேர்தலுக்குப் பின்னர் உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே அதற்கு முன்னதாக ஏர்டெல் பயனர்கள் நீண்ட நாட்கள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்டு திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்வது சிறந்த பலன் அளிக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி தர மறுக்கும் ஒன்றிய அரசு – முதல்வரின் கருத்து என்ன தெரியுமா?
அந்த வகையில் ரூபாய் 3359 க்கான ப்ரீபெய்டு திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா மற்றும் ஏர்டெல் வழங்கும் மற்ற சலுகைகளும் வழங்கப்படும். இதேபோல் ரூ.1999 ப்ரீபெய்டு திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டாவும், ரூபாய் 1299 ப்ரீபெய்டு திட்டத்தில் 365 நாள் வேலிடிட்டியில் வெறும் 24 GB டேட்டாவும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டங்களுடன் அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்,Airtel Thanks நன்மைகளாக அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle), ப்ரீ-ஹலோ டியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) போன்ற இலவச நன்மைகளும் வழங்கப்படுகிறது.