திருச்சியில் தேர்வில்லாமல் மத்திய அரசு பணி – விண்ணப்பிக்கலாம் வாங்க !
Young Professional பணியிடங்களை நிரப்ப ICAR- வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம், திருச்சி கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க 09.04.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ICAR – Trichy |
பணியின் பெயர் | Young Professional |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 09.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
ICAR காலிப்பணியிடங்கள்:
Young Professional பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
Young Professional வயது வரம்பு:
குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 45 ஆண்டுகள் வரை உள்ள தகுதியானவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பத்தார்கள் B.SC (Horti/ Agri) முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
மத்திய அரசு பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளர்வகள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து மின்னஞ்சல் [email protected] என்ற முகவரிக்கு 09.04.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.