தமிழக பெண்களுக்கு IAS IPS தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு – நவ. 24ம் தேதி வரை விண்ணபிக்கலாம்!
தமிழகத்தில் இருந்து UPSC தேர்வுகளில் பங்கேற்கும் பெண்களுக்கு உதவும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலவச பயிற்சி:
இந்தியாவில் IAS, IPS உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் UPSC தேர்வை நடத்தி வருகிறது. தமிழகத்தில் இருந்து இத்தேர்வை எழுதவுள்ள பெண்களுக்கு உதவும் வகையில் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வயது 21 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். இதில் பட்டியல் இனத்தவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சலுகை உண்டு. இப்பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்க நவ.20 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காலக்கெடு நவ.24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து தேர்வு டிசம்பர் 1ம் தேதி அன்று காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்திருத்த மசோதாவால் வெடித்த போராட்டக்களம் – நாளை (நவ.24) மின்துறை ஊழியர்கள் பேரணி!!
Exams Daily Mobile App Download
இத்திட்டத்தின் கீழ் குடிமைப் பணி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் சென்னை ராணி மேரி கல்லூரி, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் நடைப்பெறும். இதில் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பயிற்சி மையத்தை தேர்தெடுத்து 6 மாத கால பயிற்சி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.