சட்டத்திருத்த மசோதாவால் வெடித்த போராட்டக்களம் – நாளை (நவ.24) மின்துறை ஊழியர்கள் பேரணி!!
மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவால் சாமானிய மக்களுக்கு மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும் என கருதி டெல்லியில் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.
மின்துறை
நாட்டில் தற்போது பல்வேறு துறைகள் தனியார்மயமாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு புதிய சட்ட திருத்த மசோதாக்களை தாக்கல் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மின்சார சட்டத்திருத்த மசோதா ஒன்று மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவானது மின்சாரத்துறையை தனியார் மயமாக்க கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் இந்த மசோதா சட்டமானால் சாமானிய மக்கள், ஏழை விவசாயிகளுக்கு மின்சாரம் கிடைக்காது என்றும் நாட்டில் மின் கட்டணம் அதிரடியாக உயரும் என்றும் பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் இந்த சட்ட திருத்த மசோதாவை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் மின்சாரத்துறை ஊழியர்கள் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
Exams Daily Mobile App Download
இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற கோரி நாளை மின்சாரத்துறை ஊழியர்கள் பேரணி ஒன்றையும் நடத்த இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதனால் இது தொடர்பாக அரசு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.