காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழப்பு – இந்த மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்க்கும்? இன்றைய வானிலை தகவல்!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று வலுவிழந்தது. தற்போது தெற்கு ஆந்திர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. அதனால் வரும் நவ. 27ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்
இன்று வட தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து வட மற்றும் தென் தமிழக பகுதிகளிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து நவம்பர் 24,25,26,27 ஆகிய 4 நாட்களும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான ஆதார் கார்டு – புதுப்பிக்க வேண்டியது அவசியம்.. UIDAI வெளியிட்ட முக்கிய தகவல்!
Exams Daily Mobile App Download
மேலும் வெப்பநிலையானது 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளதால் மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.