கல்விக் கடன் பெற வேண்டுமா..? அதற்கான வழிமுறைகள் மற்றும் ஆவணங்கள் இதோ..!!
தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மாணவர்களிடம் படிப்பு திறமை இருந்தும், குடும்ப சூழ்நிலை மற்றும் வசதி இல்லாத காரணத்தினால் படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அத்தகைய நிலையை ஒழிக்கும் விதமாக மாணவர்களுக்கு வங்கிகள் கல்வி கடன் வழங்கி வருகிறது. அத்தகைய கடன்களை பெறும் வழிமுறைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.
கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள்:
வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கு முன்னதாக கல்லூரிகளில் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவில் அட்மிஷன் வாங்கியிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடம் இருந்து படிப்புக்கு ஆகும் செலவு குறித்து எஸ்டிமேட் பெற்றிருக்க வேண்டும்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்..!! பொருட்கள் வாங்குவதில் ஏமாற்றம்..முழு விவரம் உள்ளே..!!
தேவையான ஆவணங்கள்:
ரேஷன் கார்டு , 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் , வருமான சான்றிதழ் ஆகியவை கல்வி கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் ஆகும். மேலும், அத்தகைய நகல்களுடன் வங்கிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிப்பது நல்லது.


























