
நீங்க செல்வ மகள் திட்டத்தில் கணக்கு வச்சுருக்கீங்களா…?? ஆனா எத்தனை வருடங்கள் முதலீடு செய்யனும்னு தெரியலையா..? படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!
தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதில், குறிப்பாக “சுகன்யா சம்ரிதி யோஜனா” எனப்படும் “செல்வ மகள் திட்டம் அனைவராலும் விரும்பப்படும் சிறு சேமிப்பு திட்டமாகும். இதில், பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதுக்குள், அவர்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் மூலம் இத்திட்டத்தில் கணக்கை திறக்கலாம். ஆனால், இந்த திட்டத்தில் எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.
பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்…மகளிர் உரிமை தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்தி அரசு அதிரடி உத்தரவு…!!
அதாவது, இத்திட்டத்தில் கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். ஆனால், கணக்கு தொடங்கிய 21 ஆம் ஆண்டில் தான் இத்திட்டம் முதிர்ச்சி அடையும். அதாவது, குழந்தையின் 10 வது வயதில் நீங்கள் இத்திட்டத்திற்கான கணக்கை தொடங்கினால், அவர்களின் 31 வது வயதில் தான் முதிர்ச்சி அடையும். அதேபோல், இத்திட்டத்தில் குழந்தைகளின் கல்வி செலவிற்கு பணம் தேவைப்பட்டால், 50% தொகையை முன்கூட்டியே எடுத்து கொள்ளலாம். மேலும், திருமணத்திற்காக கணக்கை மூட நினைப்பவர்கள், திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே மூடி விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

























