
மக்களே இனி நீங்க கரண்ட் பில் கட்ட தேவையில்லை…!! நிரந்தரமாக இலவச மின்சாரம் கிடைக்கும் மத்திய அரசின் திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க…
மத்திய அரசு கிராம மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் சாமானிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது இலவசமாக மின்சாரம் கிடைக்கும் ‘PM – சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா’ திட்டம் குறித்து இந்த பதிவில் விரிவாக காண்போம். அதாவது, “இந்த திட்டத்தின் மூலம் வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய சக்தி பேனல்கள் (Solar Panel) பொருத்தப்பட்டு, அதன் மூலம் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வசதி” செய்து தரப்படுகிறது. அதாவது, “சூரிய சக்தி பேனல்கள் நிறுவ ஆகும் மொத்த செலவில் 40% மத்திய அரசு மானியம்” வழங்குகிறது.
மத்திய அரசின் வழங்கும் சிறப்பு ஓய்வூதியம் திட்டம்…!! மாதா மாதம் வட்டி மட்டுமே ரூ.5000 வரை கிடைக்கும்…!!
இதனால், அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு ரூ. 75,000 கோடி மின்சார செலவு குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கு சூரிய சக்தி பேனல்கள் நிறுவுவதற்கு ஏற்ற கூரையுடன் கூடிய சொந்த வீடு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல், இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் வீட்டில் செல்லுபடியாகும் மின்சார இணைப்பு பெற்றிருக்க வேண்டும். மேலும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://pmsuryaghar.gov.in/#/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
Join ExamsDaily Whatsapp Group

























