
மத்திய அரசின் வழங்கும் சிறப்பு ஓய்வூதியம் திட்டம்…!! மாதா மாதம் வட்டி மட்டுமே ரூ.5000 வரை கிடைக்கும்…!!
சாமானிய மக்களுக்கும் நிதி பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசினால் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும், பிரதமர் மோடியால் 2015-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, அமைப்புசாரா துறையில் உள்ளவர்களுக்கு முதுமை காலத்தில் நிதியுதவி வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகும். இந்நிலையில் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் பற்றிய முழு விவரங்களையும் இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
உங்களின் பிளாக் செய்யப்பட்ட கிரெடிட் கார்டை மீட்டெடுக்கணுமா..? அப்போ இதை மட்டும் பண்ணுங்க..!!
அதாவது, “தினசரி ஊதியம் பெறுவோர், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் முறையான ஓய்வூதியத் திட்டம் இல்லாத சிறு வணிகர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். இத்திட்டத்தில் சேர்பவர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியமாக மத்திய அரசு வழங்குகிறது. மேலும், இத்திட்டத்தின் மூலம் பலன் பெற செலுத்தப்படும் பிரீமியம் தொகை வாடிக்கையாளரின் வயதைப் பொறுத்து மாறுபடும். அந்த வகையில், 18 வயது நிரம்பிய ஒருவர் சேர்ந்தால் மாதம் ரூ.42 முதல் ரூ.210 வரை செலுத்த வேண்டும். இதுவே 40 வயதான ஒருவர் மாதம் ரூ.1,454 பிரீமியம் செலுத்த வேண்டும். இதை தொடர்ந்து, 60 வயது வரை மாதம் ரூ.210 செலுத்தி வந்தால், ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.5000 ஓய்வூதியம் கிடைக்கும்”. எனவே சிறு வயதில் இருந்தே சேமிக்கத் தொடங்கினால், உங்களின் ஓய்வு காலத்தின் போது அதிக பலன்களை பெற இது சிறந்த வழியாக இருக்கும் என்று நிதி நிபுணர்கள் கூறுகின்றனர்.
Join ExamsDaily Whatsapp Group

























