தமிழக மக்கள் நவ.10 கவனமா இருங்க.. மிக கனமழை அபாயம் ..வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
தமிழகத்தில் நீடித்து வரும் கனமழையானது, மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மண்டலம் எச்சரித்துள்ளது.மேலும், மழையால் பாதிக்கப்பட உள்ள மாவட்டங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை அபாயம்:
தமிழகத்தில் தற்போது வளிமண்டல காற்றழுத்த சுழற்சி காரணமாக பரவலாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. மேலும், நவம்பர் 9ம் தேதி இலங்கையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதனால் நவம்பர் 10ம் தேதி முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக 1000 அரசு பள்ளிகளில் CBSE பாட திட்டம் – ஆந்திரா அரசின் சூப்பர் முயற்சி!
Exams Daily Mobile App Download
நாளைய தினம் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாகவும், நவம்பர் 11ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும், தொடர்ந்து இன்று முதல் 5 நாட்களுக்கு பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.