தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகளிலும் நீர்மட்டமானது உயர்ந்து வருகிறது. ஒரு சில அணைகளில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 1.08 லட்சம் பேருக்கு இலவச உணவு.. மாநகராட்சி அறிவிப்பு.. விவரம் உள்ளே!!
அந்த வகையில், இன்று (அக்டோபர் 17) கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



























